கங்குவா ரிலீஸ் எப்போ?? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன முக்கிய பிரபலம்!!
சிகிச்சை அளிக்கப்பதாக கணவரை காக்கவைத்து, இளம்பெண் 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..! நாடே அதிர்ச்சி.!
தனது உயரிய எண்ணத்தால் கருமுட்டை தானம் செய்ய சென்ற பெண்மணியை, சிகிச்சை பெயரில் மருத்துவர் உட்பட 3 பேர் கும்பல் கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர், ஐவிஎப் (கருத்தரித்தல்) மையத்தில் 30 வயது இளம்பெண் மருத்துவர் உட்பட 2 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், பாதிக்கப்பட்ட பெண்மணி தனது கருமுட்டையை தானம் செய்ய சென்றபோது, மருத்துவர் உட்பட 3 பேர் கும்பல் அவரிடம் அத்துமீறி இருக்கிறது.
சம்பந்தப்பட்ட பெண்மணி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கருமுட்டை தானம் செய்ய கருத்தரித்தல் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் பெண்ணை மட்டும் சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று, மயக்க மருந்து செலுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.