குல்பி சாப்பிட்ட 65 குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி..!

குல்பி சாப்பிட்ட 65 குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி..!



Rajasthan Alwar 65 Children Admit Hospital 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட குல்பிக்களை வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக அவதிப்பட்டு இருக்கின்றனர். 

இதனையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதி செய்யப்படவே, விசாரணையில் அவர்கள் குல்பி சாப்பிட்டது தெரியவந்தது. 

இதனால் குல்பி விற்பனையாளரிடம் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், 60 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.