விஷ சாராயம் குடித்து சோகம்; 21 பேர் அடுத்தடுத்து துள்ளத்துடிக்க மரணம்.!

விஷ சாராயம் குடித்து சோகம்; 21 பேர் அடுத்தடுத்து துள்ளத்துடிக்க மரணம்.!



Punjab Poison Liquor Drinking 21 Died 

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் பகுதியில், கடந்த 20ம் தேதி பலரும் சாராயத்தை குடித்தனர். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். 

இவர்களில் கடந்த 20ம் தேதி 4 பேர், 21ம் தேதி 4 பேர், 22ம் தேதி 8 பேர் என 16 பேர் மொத்தமாக உயிரிழந்தனர். எஞ்சியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று கூடுதலாக 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 

இவ்விவகாரம் தொடர்பாக தற்போது வரை காவல் துறையினர் 6 பேரை கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து வருகிறது. விஷ சாராயம் குடித்து 21 பேர் அடுத்தடுத்து பலியான காரணத்தால், சங்ரூர் சோகத்தில் மூழ்கியுள்ளது.