ஆழ்ந்த கோமா நிலைக்கு செல்லும் பிரணாப் முகர்ஜி உடல்நிலை! மருத்துவமனை வெளியிட்ட தகவல்!

ஆழ்ந்த கோமா நிலைக்கு செல்லும் பிரணாப் முகர்ஜி உடல்நிலை! மருத்துவமனை வெளியிட்ட தகவல்!


pranab mukherjee health condition

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த 10 ஆம் தேதி உடல்நிலை மிக மோசமான நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர்.


இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவரது சிறுநீரக அளவுருக்கள் நேற்று முதல் சற்று மோசமாக உள்ளன. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.