#BigBreaking: சுகாதாரத்துறை அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட தலைமை காவலர்.. மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி.. அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சி.!

#BigBreaking: சுகாதாரத்துறை அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட தலைமை காவலர்.. மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி.. அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சி.!


Police shooting health minister in odisha

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அமைச்சரை தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் நாபா தாஸ். இவர் அங்குள்ள ஜர்ஸுக்குடா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று பயணித்து இருந்தார். 

அப்போது, காரில் இருந்து இறங்கிய அமைச்சர் தாஸை, தலைமை காவலர் துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளார். இதில், அவரின் நெஞ்சில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். 

odisha

இதனையடுத்து, அமைச்சரை மீட்ட காவல் துறையினர், காரின் மூலமாக ஹெலிகாப்டர் தளத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அமைச்சரை சுட்ட தலைமை காவலரை கைது செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் துப்பாக்கிசூடுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.