தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்!. அதிர்ந்துபோன காவல்துறையினர்!.

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்!. அதிர்ந்துபோன காவல்துறையினர்!.



police find the four people death boady in a home

கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வண்ணபுரம் பகுதியை சேர்ந்த  கிருஷ்ணன் இவரின் மனைவி சுஷீலா, இவர்களுக்கு அர்ஷா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 4 நாட்களாக குடும்பத்தில் இருந்து யாரும் பால் வாங்க வராததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டுக்காரர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் வீட்டினை திறந்து பார்த்து பொழுது, வீட்டுச்சுவர்கள் மற்றும் பால்கனி பகுதிகளில் இரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

death

பின்னர் தீவிரமாக நோட்டமிட்ட போலீசார் தோட்ட பகுதியில் தேடும்பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்த மணல் மேடு மீது ஈக்கள் மொய்ப்பதை பார்த்து சந்தேகித்து அப்பகுதியை தோண்டுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்களின் உதவியுடன், அந்த இடத்தை தோண்டும்பொழுது காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர், 4 பேரின் உடல்களும் ஒருவர் மேல் ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

death

உடனடியாக அவர்களின் உடல்களை மீட்டு ஆய்வு மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் கிருஷ்ணனின் முகம் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதும், அவரது மனைவியின் மார்பு பகுதியில் சேதப்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். அதே சமயம் அவரது மகளின் முதுகுப்பக்கத்திலும், மகன் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தது.                                      
இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம்  விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கிருஷ்ணனுக்கு பில்லி, சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருப்பதால் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி இரவு நேரங்களில் பலரும் வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்டிருந்த இடத்தில் இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டதால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். அங்கு நடந்த சம்பவம் அந்த மாநிலத்தையே சோகத்துக்கு உள்ளாக்கியது.