ATM-ல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தமா?.. வங்கிப்பயணர்களே உஷார்...! 

ATM-ல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தமா?.. வங்கிப்பயணர்களே உஷார்...! 



pib-explain-atm-withdrawal

 

நாம் உபயோகம் செய்யும் வங்கி கணக்கில் பணத்தை எடுக்க பயன்படும் ஏ.டி.எம்-க்கு என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏ.டி.எம்மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் ரூ.173 பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது. 

ATM

இது குறித்து விளக்கம் அளித்துள்ள PIB (Press Information Bureau), இந்த தகவலை தவறானது என்று கூறியுள்ளது. மேலும், வங்கி ஏ.டி.எம்களில் ஐந்து முறை இலவசமாக யாராக இருந்தாலும் பணம் எடுக்கலாம். அதனை தாண்டி பணம் எடுக்கும் பட்சத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூபாய் 21 பிடித்தம் செய்யப்படும். 

ATM

எந்த வகையிலும் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 பிடித்தம் செய்யப்படாது. மேற்கூறிய தகவலான தவறானது. அவ்வாறு வங்கியில் கூடுதல் தொகை பிடித்திருக்கும் பட்சத்தில் வங்கியில் நேரில் சென்று புகார் அளிக்கலாம் அல்லது RBI-யிடம் புகார் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.