
#SHOCKING_NEWS: 8 வயது சிறுமியை கோடரியால் வெட்டி, தலையை துண்டித்து ஊர்வலம் வந்த இளைஞன்.. பேரதிர்ச்சி சம்பவம்.!
இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமியை கொலை செய்த கொடூரன், தலையை துண்டித்து கிராமத்தில் ஊர்வலம் சென்ற பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டம், ஜமன் கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை கடனை முடிக்க காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில், சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞன் பின்தொடர்ந்து சென்றுள்ளான்.
அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் கோடரியால் சிறுமியின் தலையை துண்டித்த இளைஞன், தலையை தனியே எடுத்து இரத்தம் சொட்டச்சொட்ட கிராமத்தை வலம்வந்துள்ளான். இதனைக்கண்டு பதறிப்போன கிராம மக்கள் கயவனை பிடிக்க முயற்சித்தபோது, கையில் கோடரி இருப்பதால் யாரேனும் முன்னால் வந்தால் கொலை செய்திடுவேன் என்று மிரட்டி இருக்கிறான்.
பின்னர், அடிக்குழாயில் கோடரியை சுத்தம் செய்த நிலையில், இந்த தகவலை அறிந்த இளைஞனின் மனைவி கணவனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, கொடூரன் அவரையும் சரமாரியாக தாக்கவே, தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இளைஞனை கைது செய்தனர்.
30 வயது கொடூரன் மதுபோதையில் இருப்பதால், அவனிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்த இயலாமல் திணறியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவனுக்கும் - சிறுமியின் குடும்பத்தாருக்கும் எவ்வித முன்விரோத சண்டையும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
Advertisement
Advertisement