#BigBreaking: சரக்கு இரயிலின் மீது கோரமண்டல், துரந்தோ இரயில்கள் மோதி பயங்கர விபத்து; அடுத்தடுத்த அதிர்ச்சியை தரும் தகவல்.! 



Odisha Coromandel Express another 2 train accident

 

ஒடிசா மாநிலத்தில் உள்ள பால்சோர் பகுதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி பயணித்த கோரமண்டல் அதிவிரைவு இரயில் தடம்புரண்ட சரக்கு இரயில் மீது மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் தற்போது வரை 50 பேர் பலியாகியுள்ள நிலையில், 350-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தடம்புரண்ட கொரண்டல் விரைவு இரயில் மீது துறந்தோ மற்றும் சரக்கு இரயில் ஆகியவை அடுத்தடுத்து தடம்புரண்டு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றன. இந்த தகவலால் மக்களுக்கு பெரும் அச்சம் எழுந்துள்ளது.
பலி எண்ணிக்கை மற்றும் படுகாயம் அடைந்தோரின் எண்ணிக்கை அடுத்தடுத்து உயருவதால் பெரும் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.