பாம்புக்கே டப் கொடுக்கும் நாகினி ஆட்டம்... 5 இளைஞர்களை உள்ளே தூக்கி வைத்த வனத்துறையினர்.!

பாம்புக்கே டப் கொடுக்கும் நாகினி ஆட்டம்... 5 இளைஞர்களை உள்ளே தூக்கி வைத்த வனத்துறையினர்.!



odisa-5-mens-by-foresters

திருமண விழாவில் பாம்பை வைத்து வித்தை காட்டிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் கரண்ஜியா நகரில், கடந்த புதன்கிழமை திருமண நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த ஒருவர் நல்ல பாம்பை வைத்து வித்தை காட்டியுள்ளார். பாம்பு பிடி வீரரான அவர் நாகினி ஆட்டமாடி ஐந்து பேருடன் நல்ல பாம்பை வைத்து வித்தை காட்டியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் நல்ல பாம்பு கூடையிலிருந்து வெளியே வரும்போது, ஐந்து பேரும் நாகினி ஆட்டம் ஆடி வித்தை காட்டியுள்ளனர். இதனை வீடியோ எடுத்த அங்கு சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், இதற்கு பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

odisa

தொடர்ந்து பாம்பு பிடி வீரர் குறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை மீட்டனர். மேலும், தப்பியோடிய 5 பேரை துரத்தி சென்று மடக்கி பிடித்து, பாம்பு பிடி வீரரை வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மேலும், 'வன விலங்குகளை துன்புறுத்தி இதுபோன்று வேலைகளை செய்பவர்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை உள்ளதாகவும், விலங்குகளை வைத்து வித்தை காட்டி நல்ல பெயர் வாங்க நினைக்கும் உத்தமர்கள் விலங்குகளை வதைப்பது குறித்து தெரியாமல் இருக்கின்றனர்' என்றும் தெரிவித்துள்ளனர்.