பூட்டிய வீட்டிற்குள் வந்த துர்நாற்றம்... கதவை உடைத்த உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி... புதுமணப்பெண்ணின் அதிரடி செயல்...

பூட்டிய வீட்டிற்குள் வந்த துர்நாற்றம்... கதவை உடைத்த உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி... புதுமணப்பெண்ணின் அதிரடி செயல்...



new-married-girl-murder-her-husband-with-boy-friend-in

மகாராஷ்டிரா மாநிலம் சாக்கினாக்கா பகுதியில் வசித்து வந்தவர் நசீம்கான். இவர் சில தினங்களுக்கு முன்பு ரூபினா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது மகன் நசீம்மை காண அவரது தந்தை சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அதனை அடுத்து நசீமின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

maharashtra

போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது கட்டிலுக்கு அடியிலே ரத்தக்கரையுடன் அழகிய நிலையில் சடலமாக கிடந்து இருக்கிறார் நசீம்கான். உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார்,  அவரது மனைவி ரூபினாவை தேடி இருக்கிறார்கள்.   ரூபினாவின் செல்போன் எண்ணை  வைத்து அவரையும் அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

போலீசார் நடத்திய விசாரணையில் ரூபினாவிற்கு நசீம்கான் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரூபினா தனது ஆண் நண்பரை வரவழைத்து கணவரை சமாதானபடுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரூபினா நசீம்கானின் தலையில் உண்டியலால் கடுமையாக தாக்கி இருக்கிறார். அதன் பின்னர் ரூபினா தனது ஆண் நண்பருடன் சேர்ந்து நசீம்கான் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரை கட்டிலுக்கு அடித்து வைத்து தலைமறைவாகியது தெரியவந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.