42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
பூட்டிய அறையில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
![Mystery death women in Karnataka](https://cdn.tamilspark.com/large/large_deadd-67850.jpeg)
கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி அருகே தலைமை ஆசிரியர் குடியிருப்பில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இங்குள்ள 4வது தளத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கே வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோது வீட்டின் படுக்கையறையில் பெண் சடலம் நிறுவனமாக கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த சப்பன் குமார் என்பவர் வசித்து வருவதும், இறந்த பெண் அவருடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.
அதன் பின்னர் சப்பன் குமாரின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமயமாக உள்ள சப்பன்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.