இந்தியாவிலிருந்து கனடாவிற்கு அனுப்பிய பார்சலில் மர்ம பொருள்... காவல்துறை விசாரணையில் ஒருவர் கைது,!

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு அனுப்பிய பார்சலில் மர்ம பொருள்... காவல்துறை விசாரணையில் ஒருவர் கைது,!



mysterious-substance-in-the-parcel-sent-from-india-to-c

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து  கனடாவிற்கு கொரியர் மூலம் போதை பொருளை அனுப்பும் என்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும்  பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை பஞ்சாபில் இருந்து கனடாவிற்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்றை அனுப்புவதற்கு வந்திருக்கிறார் பஞ்சாப்பைச் சேர்ந்த சுக்விந்தர் சிங். அந்தப் பார்சலை கொரியர் நிறுவன அதிகாரிகள் ஸ்கேன் செய்த போது அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்திருக்கிறது.

Indiaஇதனைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கொரியர் அலுவலகத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதிலிருந்த சத்துமாவிற்குள் சிறிய பாக்கெட்டில் போதை பொருள் ஒன்று வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

Indiaஇதனைத் தொடர்ந்து பார்சலை அனுப்பிய சுப்வீந்தர் சிங்கை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பார்சலை அவர் கனடாவில் இருக்கும்   வரிந்தர் சிங் என்பவருக்கு அனுப்பி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்