காதலித்து மதம்மாற்றி திருமணம்.. ஹிஜாப் அணிய மறுத்த மனைவி கணவனால் குத்தி கொலை; நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.!

காதலித்து மதம்மாற்றி திருமணம்.. ஹிஜாப் அணிய மறுத்த மனைவி கணவனால் குத்தி கொலை; நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.!



MUMBAI WIFE KILLED BY HUSBAND SHE AVOID HIJAB INTER REGION MARRIAGE

 

ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், ஹிஜாப் அணிய மறுத்த பிரச்சனைக்காக விவாகரத்து வாங்கி மனைவியை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் இக்பால் ஷேக் (வயது 36). இவர் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் ரூபா என்ற இந்து மதத்தைச் சார்ந்த பெண்ணை இக்பால் ஷேக் காதலித்து வந்த நிலையில், பெண்மணி மதம் மாறி தனது பெயரை சாரா என மாற்றிக்கொண்டு காதலரை கரம்பிடித்தார்.

தம்பதிகள் இருவரும் திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலயில், கடந்த 2020ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில், தம்பதியிடையே மதரீதியான பிரச்சனை எழுந்துள்ளது. கணவர் ஷேக் மனைவியை பர்தா அணிய சொல்வது உட்பட முஸ்லீம் மத நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளார். 

Mumbai

இது ரூபா என்ற சாராவிடையே மனவிரக்தியை ஏற்படுத்த, ஒருகட்டத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு அவர் தனியே சென்றுள்ளார். இதனால் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட இக்பாலுக்கும் விவாகரத்து கிடைத்துவிட, குழந்தையை யார் வளர்ப்பது என்ற பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக இருவரும் சம்பவத்தன்று வெளியில் சந்தித்து பேசிக்கொண்ட நிலையில், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை கணவன் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் இக்பால் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.