ஆன்லைன் ஷாப்பிங்-கை ஹாபியாக வைத்துள்ளீர்களா?.. டவல் ஆர்டர் செய்த மூதாட்டியிடம் ரூ.8 லட்சம் அடித்த கும்பல்..! 



mumbai-towel-order-scam-rs-8-lakh-duped

இணையவழியில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூதாட்டி ஒருவர் இணையவழியில் ரூ.1169-க்கு டவல் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.19000 பணம் எடுக்கப்பட்ட நிலையில், பதறிப்போன அவர் வங்கிக்கு புகார் அளித்துள்ளார். 

அதனை தொடர்ந்து வங்கியில் இருந்து பேசுவதாக தொடர்புகொண்ட மர்மநபர் மூதாட்டியிடம் அவரது செல்போனில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய சொல்லி அதன் மூலமாக ரூ.8 லட்சம் பணத்தை அபேஸ் செய்துள்ளனர். 

maharashtra

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே இணையவழியில் பொருட்கள் வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டும். 

யாரேனும் உங்களை தொடர்புகொண்டு செயலி அல்லது வேறு ஏதாவது லிங்க் அனுப்பி உள்ளே சென்று பார்க்க சொன்னால் அவ்வாறு செய்யாமல் காவல்நிலையத்தை அணுகவேண்டும்.