கணவருடன் குடும்பத்தகராறு; 2 குழந்தைகளை விஷம்கொடுத்து கொன்று, தாய் தானும் தற்கொலை.!



Mumbai Nashik Women Died and 2 Children Killed 


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, நாசிக் பகுதியை சேர்ந்த பெண்மணி அஸ்வினி (30). இவர் கணவர் ஸ்வப்னிலுடன் வசித்து வருகிறார். தம்பதிகளுக்கு ஆராதயா (8), அகஸ்தியா (2) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

கணவன் - மனைவி சண்டை:

தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று விரக்தியில் இருந்த பெண்மணி, தனது கணவர் வெளியே சென்றபின் குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துள்ளார். 

குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை:

அதனை குடித்த குழந்தைகள் இறந்துவிட, பெண்மணியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் கணவரின் தொல்லை காரணமாக குழந்தைகளை கொலை செய்து தான் தற்கொலை செய்வதாகவும் கூறி இருக்கிறார். 

இதனால் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.