ஆசையாக சிக்கன் சவர்மா வாங்கி சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாப பலி.!



Mumbai Man Died After Eating Chicken Shawarma 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் ப்ரதமேஷ் போக் (19). இவர் நேற்று சிக்கன் சவர்மா வாங்கி ஆசையாக சாப்பிட்ட நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 

இதனால் அவர் வாங்கி சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவின் நிலை மற்றும் அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து கண்டறிய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் குன்றி நடந்த சோகம்:

கடந்த மே 3 ம் தேதி சவர்மா வாங்கி சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

பின் உடல்நலம் தேறி 5 ம் தேதி வீட்டிற்கு வந்த இளைஞருக்கு, மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.