46,31,000 ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் கடத்தல்! வளைத்து பிடித்த காவல்துறையினர்!!

46,31,000 ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் கடத்தல்! வளைத்து பிடித்த காவல்துறையினர்!!



Mumbai Anti Narcotics Cell, Bandra unit has arrested two drug peddlers from Andheri.

ந்தியாவில், போதைப்பொருள் பரிமாற்றம் மற்றும் போதை பொருள் உபயோகம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட சீரழிந்து போகிறார்கள். இந்த போதையால் பலர் குடும்பம் இழந்து தவிக்கிறார்கள். 

இந்த நிலையில், தற்போது மும்பையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளது. 

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பாந்த்ரா பிரிவு அந்தேரியில் இருந்து இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது. 

அவர்களிடமிருந்து 46,31,000 ரூபாய் பெறுமதியான எம்.டி போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. NDPS சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.