கனவு வந்ததால் பெற்ற மகளை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.! விசாரணையில் அடுக்கடுக்காக வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!



Mother killed 12 year girl child in rajasthan

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதிக்கு அருகில் உள்ள அந்தா நகரம் ஷிவ் காலனியை சேர்ந்தவர் ரேகா. இவரது கணவர் ஹடா. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் ரேகா தனது 12 வயது மகளை கழுத்தில் நெறித்து கொலை செய்துள்ளார். இது குறித்து அவரது மகன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரேகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  அப்பொழுது ரேகா, தனது மகனுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதாகவும், அதனை குணப்படுத்த தனது மகளை பலி கொடுக்க வேண்டும் என கனவு வந்தால் தான் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

Murder

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரித்ததில், ரேகா மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் அவர் ஏற்கனவே கணவரை கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே வீட்டில் கணவர் இல்லாத போது அவர் மகன் மற்றும் மகளை கொலை செய்ய முயன்றுள்ளார் அப்பொழுது மகன் தப்பியோடிய நிலையில் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து போலீசார் ரேகா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.