கொரோனா அதிகமாக பரவிவரும் நிலையில், அன்புமணியுடன் பேசிய மோடி! அவர்கள் என்ன பேசினார்கள்?

கொரோனா அதிகமாக பரவிவரும் நிலையில், அன்புமணியுடன் பேசிய மோடி! அவர்கள் என்ன பேசினார்கள்?


modi talk with Anbumani ramadhas

நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் வருகிற 8-ந்தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. அந்த ஆலோசனையில், கொரோனாவை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இனிமேல் எதுமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும், தேசிய ஊரடங்கை தொடரலாமா ? வேண்டாமா ? என்பது பற்றியும் விவாதிக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

modi

அப்போது, அவரது உடல் நலன் குறித்தும், பாமக நிறுவனர் ராமதாஸின் உடல் நலன் குறித்தும் மோடி விசாரித்துள்ளார். தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய பிரதமர் மோடி, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் உறுதியளித்தார். அதைக்கேட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஒரு மருத்துவர் என்ற முறையில் அரசின் நடவடிக்கைகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றாக  புரிந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.