"அவ கேரக்டர் சரியில்ல..." கொடூரமாக கொலை செய்த பின் காதலன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்.!



man-murder-his-lover-and-gave-a-shocking-statement-to-p

விசாகப்பட்டினத்தில் பெண் ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த காதலர் அளித்துள்ள வாக்குமூலம்  பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஜகதம்பா பகுதியில் வசித்து வந்தவர் ஷிராவாணி. இவருக்கும் குண்டூரைச் சார்ந்த ஒருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஷிராவாணி  சில காலம் தனது பெற்றோருடன் கோவாவில் வசித்து வந்தார்.

Inida

ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டும் விசாகப்பட்டினம் திரும்பிய ஷிராவாணி அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஓவியரான கோபாலகிருஷ்ணன் என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாகி இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். அவர்கள் தனியாக ஒரு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஷிராவாணி  நடவடிக்கையில் கோபாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் பல ஆண்களுடன் நட்பாக நெருங்கி பழகி வந்ததை  இவர் கண்டித்து இருக்கிறார்.

மேலும் வெங்கி என்ற நபருடன் பழகக் கூடாது என பலமுறை எச்சரித்துள்ளார். இதனைக் கண்டு கொள்ளாத ஷிராவாணி வெங்கியுடன் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் ஷிராவாணியை  கொலை செய்ய முடிவு செய்து அதிகாலை 3 மணிக்கு விசாகப்பட்டினம் கடற்கரை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரே காவல் நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார். தன்னைப் போன்று பிற ஆண்களும் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக தான் கொலை செய்ததாக  காவல்துறையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.