மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞர்! பிரேத பரிசோதனை செய்ய தயாரான ஊழியர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞர்! பிரேத பரிசோதனை செய்ய தயாரான ஊழியர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!



man-found-alive-before-postmortem-after-he-died

ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர் ஜிதேந்திரா ஒரன். சமீபத்தில் இவர் தனது வீட்டின் கூரையை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அவர் மீது மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர்  உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி ஓடியுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் கதறி துடித்துள்ளனர்.பின்னர் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக RIMS மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்ய சென்ற மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஓரனின் இதயம் துடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Postmortem

இந்நிலையில் ஜிதேந்திராவின்  குடும்பத்தினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் அவர் உயிரிழந்து விட்டார்.அவர் இறந்து விட்டதாக கூறிய ஐந்து மணி நேரத்திற்கு பின்பும் இதயம் துடித்துள்ளது. இதனை முன்பே கண்டுபிடித்திருந்தால் ஓரனின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் முதலில் பரிசோதனை செய்த மருத்துவர்களும் ஒரனின் நாடி மற்றும் இதயத்தில் துடிப்பு இல்லை. அதனாலேயே அவர் இறந்துவிட்டதாக நாங்கள் உறுதி  செய்தோம் என கூறியுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.