Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அடச்சீ.. பாட்டியையுமா?.. எப்படிடா மனசு வருது?.. 70, 72 வயது மூதாட்டிகள் பாலியல் பலாத்காரம்.. 22 வயது காமுகன் பகீர் செயல்..!
அடச்சீ.. பாட்டியையுமா?.. எப்படிடா மனசு வருது?.. 70, 72 வயது மூதாட்டிகள் பாலியல் பலாத்காரம்.. 22 வயது காமுகன் பகீர் செயல்..!

வீட்டில் தனியே வசித்து வந்த 70 வயது மற்றும் 72 வயது மூதாட்டிகள் அடுத்தடுத்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், வாசந் நகரில் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியே வசித்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி 22 வயது இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அன்றைய நாளின் இரவில் 70 வயது மூதாட்டியின் அண்டை வீட்டில் வசித்து வந்த 72 வயது மூதாட்டியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அடுத்தடுத்த வீடுகளில் இருந்த மூதாட்டிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, 22 வயது இளைஞனான பூஷன் ஹிந்தோல் என்பவரை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மேற்கூறிய 2 மூதாட்டிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது அவர்தான் என்பது உறுதியானது. அவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நேற்று கைது செய்த் உசிரையில் அடைத்தனர்.