கொரோனா தடுப்பூசி போட்டவர் உடலில் ஒட்டிக்கொள்ளும் இரும்பு பொருட்கள்..!! வைரல் வீடியோ..

கொரோனா தடுப்பூசி போட்டவர் உடலில் ஒட்டிக்கொள்ளும் இரும்பு பொருட்கள்..!! வைரல் வீடியோ..


Maharashtra man got magnet power after taking corona vaccine

கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தனது உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக நபர் ஒருவர் கூறும் சம்பவமும், அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவும் பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சிவாஜி சவுக்கில் வசித்து வரும் அரவிந்த் சோனர் என்பவர் சமீபத்தில் கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் அவர் உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

அவர் உடலில் எந்தப் பாகத்தில் இரும்பு பொருட்களை வைத்தாலும் அவை டப்பென்று ஒட்டிக்கொள்ளத் தொடங்கியதாக அவர் கூறுகிறார். முதலில் மகிழ்ச்சியாக இருந்த அவருக்கு பிறகு இதுகுறித்து பயம் தொற்றிக்கொண்டது. 

உடனே மருத்துவர்களை அனுகியபோது அவர்களுக்கும் இது பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களும் இதனை கண்டறிய பல முயற்சிகளை செய்தும், ஏன் அவரது உடலில் இப்படி நடக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இதுபோன்று ஏற்பட்ட வாய்ப்பு இல்லை எனவும், இதுகுறித்து ஆராய்ந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.