13 வயது சிறுமி மூவர் கும்பலால் சீரழிக்கப்பட்டு கொலை; உதிரப்போக்கால் துள்ளத்துடிக்க உயிரிழந்த பரிதாபம்.!



Madhya Pradesh Sagar Minor Girl Gang Raped Killed 


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபக் படேல் (வயது 25), அக்சய் ஷென் (வயது 19), ஷியாம் (வயது 20). 

இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். மூவரும் அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று சிறுமியை தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். 

விபரீதம் புரியாத சிறுமியும் நண்பர்களுடன் செல்ல, தனிமையான இடத்தில் மூவரும் சேர்த்து கூட்டாக அவரிடம் அத்துமீறி இருக்கின்றனர். 

இந்த சம்பவத்தில் சிறுமிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு  சுயநினைவை இழந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி மயங்கியதும் அவர் இறந்துவிட்டதாக எண்ணி உடலை ஆற்றில் வீசி கொலை செய்து அங்கிருந்து வந்துள்ளனர். 

பின் சிறுமி மாயமானது தொடர்பாக விசாரித்து வந்த காவல் துறையினர், அவரின் உடலை ஆற்றில் இருந்து மீட்டனர். அதனைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.