செல்பி ஆசையில் பயங்கரம்; 800 அடி நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.!

செல்பி ஆசையில் பயங்கரம்; 800 அடி நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.!



 Madhaya Pradesh Mohadi Water Falls Youngster Died 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், Khudai Mohadi நீர்வீழ்ச்சி பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். 

இந்நிலையில், இந்தூர் கஜ்ரானா பகுதியை சேர்ந்த இளைஞர், தனது நண்பர்கள் குழுவுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். 

800 அடி உயரத்திற்கு மேல் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்ற நண்பர்கள் குழுவில், மோஹிம் என்ற இளைஞர் வீம்பு பகுதியில் இருந்து செல்பி எடுத்துள்ளார். 

மத்திய பிரதேசம்

அப்போது, அவர் தவறி விழவே, பாறை இடுக்கு பகுதியில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். அப்பகுதியில் செல்போன் டவர் பிரச்சனை என்பதால், உடனடியாக மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்க வழியில்லை.

தாமதமாக சென்ற தகவலுக்கு பின் அதிரடியாக விரைந்த அதிகாரிகள், 12 மணிநேர தேடலுக்கு பின் மொஹிமின் சடலத்தை மீட்டனர்.