மீண்டும் ஒரு புன்னகை மன்னன்: சொகுசுப் பேருந்தில் விஷம் அருந்திய காதலர்கள்... காதலிக்கு நேர்ந்த சோகமான முடிவு.!



lovers-who-plan-to-commit-suicide-in-the-sleeper-bus-gi

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்லீப்பர் கோச் பேருந்தில் காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறத. இதில் காதலி இறந்து விட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய காதலனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.

கர்நாடக மாநிலம்  ஹவேரி மாவட்டத்தில் உள்ள பாகல் கோட்டை பகுதியைச் சார்ந்த  அகில்  மற்றும் ஹேமா கிருஷ்ணப்பா இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஹேமா பி காம் இறுதியாண்டு படித்து வந்தார். இவர்கள் காதலிக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

India

ஆனாலும் இவர்களால் தங்கள் காதலை கைவிட முடியவில்லை. இந்நிலையில்  காதலர்கள் இருவரும் தனியார் பேருந்தில் ஸ்லீப்பிங் கோச்சில் பயணித்துள்ளனர். ரானேபென்னூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கிரீன் பேலஸ் என்ற ஹோட்டலில் உணவருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கிய நிலையில் காதலர்கள் மட்டும் இறங்கவில்லை. மேலும் பேருந்தில் விஷ துர்நாற்றமும் வீசி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து  சந்தேகமடைந்த  பயணிகள் அவர்களது பெர்த்தை  சோதனை செய்துள்ளனர். அப்போது காதலர்கள் இருவரும்  வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு வைத்து ஹேமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகில் குணமாகி வீடு திரும்பினார். அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. பெற்றோர்கள் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மும்பை செல்வதாக கூறிவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார். காதலர்கள் இருவரும் விஷம் அருந்திய நிலையில் அந்த பெண் மட்டும் பரிதாபமாக உயிர் இழந்தது வேதனை அளிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.