காதலியை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்து காதலன் செய்த கொடூரம்.! அதிரவைக்கும் பகீர் சம்பவம்!!

காதலியை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்து காதலன் செய்த கொடூரம்.! அதிரவைக்கும் பகீர் சம்பவம்!!



lover-killed-and-cut-girl-friend-body

மகாராஷ்டிராவில் வசித்து வந்தவர் 52 வயது நிறைந்த மனோஜ் சாஹனி. இவர் மிரா பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தனது 32 வயது காதலியுடன் லிவ் இன் டு கெதர் முறையில் வசித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஏறக்குறைய 3 ஆண்டுகளாக ஒன்றாக அங்கு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென அந்த வீட்டிலிருந்து மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அவர்கள், தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனோஜ் சாஹனியே அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடலின் சில பாகங்களை குக்கரில் வேகவைத்து அதனை நாய்க்காக உணவாகவும் போட்டுள்ளார். இந்நிலையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.