இன்பசுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் கூட்டுப்பலாத்கார முயற்சி.. காமுகர்கள் வெறிச்செயல்..! பரபரப்பு சம்பவம்.!!

இன்பசுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் கூட்டுப்பலாத்கார முயற்சி.. காமுகர்கள் வெறிச்செயல்..! பரபரப்பு சம்பவம்.!!



Lithuania Girl Tour India Sexual Abuse Attempt in Andra Pradesh 2 Youngsters Arrested

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணுக்கு உதவுவுது போல நடித்து, 2 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வாரத்தில் லிதுவேனியா நாட்டினை சேர்ந்த இளம்பெண் இந்தியாவுக்கு வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூர் வழியே கோவா செல்ல திட்டமிட்டு, ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார். இவருடன், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர், கூடூர் கிராமத்தை சேர்ந்த சாய்குமார் (26) என்பவரும் பயணித்துள்ளார். 

இளம்பெண் பேருந்து பயணசீட்டுக்கு தனது நாட்டு கரன்சியை கொடுக்க, அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நடத்துனர் இந்திய பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, இதனைகவனித்த சாய்குமார் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து வெளிநாட்டு பெண்ணுக்கு பயணசீட்டு எடுத்துள்ளார்.

Lithuania

இதனால் இருவருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட, இளம்பெண்ணை சாய்குமார் தனது சொந்த ஊருக்கு வந்து செல்ல அழைத்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தவன் என்பதால், வீட்டிற்கு தானே அழைக்கிறான் என வெளிநாட்டு பெண்ணும் அவனுடன் சென்றுள்ளார். 

அவரை கிராமத்திற்கு அழைத்து சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த நிலையில், வீட்டில் தங்கவைத்து சாப்பாடும் வழங்கியுள்ளனர். இதன்பின், வெளிநாட்டு கரன்சியை இந்திய பணமாக மாற்றலாம் என இருசக்கர வாகனத்தில் சாய்குமார் பெண்ணை அழைத்து சென்றுள்ளார். 

இவர்களுடன் கூடூர் கிராமத்தில் வசித்து வரும் சாயின் நண்பர் ஷேக் அபித் (28) என்பவரும் பயணத்தில் இணைந்துள்ளார். இவர்கள் மூவரும் சைதாபுரம் ராவூர் வனப்பகுதி அருகே சென்றுகொண்டு இருந்த போது, சாய்குமார் மற்றும் ஷேக் அபித் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். 

Lithuania

இவர்களிடம் சண்டையிட்டு தப்பிய பெண்மணி, வனப்பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று உதவி கேட்டுள்ளார். அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் பெண்ணை மீட்டு சைதாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், வனப்பகுதியில் பதுங்கி இருந்த சாய்குமார் மற்றும் ஷேக் அபித் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.