மயிர் இலையில் உயிர் தப்பிய பள்ளி மாணவன்... ஷாக்கிங் வீடியோ!! ஷூவில் பதுங்கி இருந்த நாகத்தால் ஏற்பட்ட பரபரப்பு...

மயிர் இலையில் உயிர் தப்பிய பள்ளி மாணவன்... ஷாக்கிங் வீடியோ!! ஷூவில் பதுங்கி இருந்த நாகத்தால் ஏற்பட்ட பரபரப்பு...



Kovi snake video goes viral

கோவையை  வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியை
சேர்ந்த பிரதீப் என்ற மாணவன் காலையில் பள்ளி செல்வதற்காக ஆயத்தமாகிய பிறகு வீட்டிற்கு வெளியே வந்து வெளியே இருந்த தனது ஷூவினை காலில் மாட்டுவதற்காக எடுத்துள்ளான்.

அப்போது ஷூவிலிருந்து ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து பிரதீப் காலணியை கீழே தட்டி பார்த்த போது குட்டி நாகப்பாம்பொன்று வெளியில் வந்து மிரட்டியுள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளான் பிரதீப். உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வந்து பாதுங்கி இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அதனை பார்த்த நெட்டிசன்கள் மயிர் இலையில் உயிர் தப்பியுள்ளான் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.