கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் கொலை விவகாரம்; சஞ்சய் ராய் குற்றவாளி - நீதிமன்றம் அறிவிப்பு.!

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில், பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர், பணி ஓய்வு நேரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
சஞ்சய் ராய் குற்றவாளி
இந்நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். சியால்டா நீதிமன்றத்தில் 57 நாட்களில் விசாரணை நிறைவுபெற்று, 50 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புகார் கொடுக்க வந்த பெண்ணை பாத்ரூமூக்கு அழைத்து பாலியல் சீண்டல்; டிஎஸ்பி வீடியோ லீக்.!
குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான அறிவிப்பு ஜன. 20ம் தேதி வெளியாகும் எனவும் நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் விஷம் கலந்து ஆன்லைன் காதலன் கொலை முயற்சி; நேரில் வந்து ஷாக் கொடுத்த பெண்.!