பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கவுன்சிலிங் வந்த 17 வயது சிறுமி மருத்துவரால் பலாத்காரம்..!

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கவுன்சிலிங் வந்த 17 வயது சிறுமி மருத்துவரால் பலாத்காரம்..!



kerala-trissur-sexual-abuse

 

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே எலித்திப்பற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சூப்பிரண்டு அதிகாரியாக பணியாற்றியவர் கே.எம்.சஜீவ் (வயது 50). 

கடந்த 1-ஆம் தேதி மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் ஆலோசனைக்காக பாலியல் பலாத்கார வழக்கில் வந்திருக்கிறார். அப்போது கவுன்சிலிங் வந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று கவுன்சிலிங் தருவதாக மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

KERALA

இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவரவே சாலக்குடி நீதிமன்றத்தில் குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.