வித்தவுட்டில் வந்த பயணியை ஷூ காலுடன் நெஞ்சிலேயே மிதித்த காவல் ஆய்வாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

வித்தவுட்டில் வந்த பயணியை ஷூ காலுடன் நெஞ்சிலேயே மிதித்த காவல் ஆய்வாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!


kerala-kannur-to-thiruvananthapuram-express-cop-beat-wi

இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணியை காவல் ஆய்வாளர் நெஞ்சில் ஷூ காலுடன் மிதித்து கொடுமை செய்த பகீர் காணொளி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் இரயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரத்திற்கு மாவேலி எக்ஸ்பிரஸ் இரயில் சென்றுகொண்டு இருந்தது. இந்த இரயில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி பயணித்த நிலையில், இரயில் வடகரா இரயில் நிலையத்தை தாண்டி சென்றுகொண்டு இருந்தது. 

அப்போது, இரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த கண்ணூர் காவல் ஆய்வாளர் பிரமோத், இரயிலில் பயணித்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார். 40 வயது மதிக்கத்தக்க நபர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த நிலையில், ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் அவரை கீழே தள்ளிவிட்டு ஷூ காலுடன் நெஞ்சில் ஏறி சரமாரியாக மிதித்து இருக்கிறார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற பயணிகள், காவல் ஆய்வாளரை தடுத்துள்ளனர். அதனையும் பொருட்படுத்தாத அதிகாரி, அவரை தொடர்ந்து மிதித்துள்ளார். இதுகுறித்த நிகழ்வை பயணி விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, காவல் ஆய்வாளரின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பான வீடியோ கண்ணூர் காவல் ஆணையர் இளங்கோவின் கவனத்திற்கு செல்லவே, அவர் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.