என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
வீட்டு வாடகை பிரச்சனையில், அடுக்குமாடி குடியிருப்பு மேலாளர் அடித்து கொலை.!
வீட்டு வாடகை பிரச்சனையில், அடுக்குமாடி குடியிருப்பு மேலாளர் அடித்து கொலை.!
வாடகை தொடர்பான பிரச்சனையில் வாடகைக்கு குடியிருந்தவர் அடுக்குமாடி குடியிருப்பு மேலாளரை அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் புறநகர், ஒசக்கோட்டை நந்தகுடி - மேலுகாமனஹள்ளியில் பரத் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளராக சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில், மேற்கிந்திய தீவை சேர்ந்த பாபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதால், பாபியை சந்தித்த சிவகுமார் வீட்டினை காலி செய்ய கூறியுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாபி, சிவகுமாரை தாக்கி, அவரின் தலையை பிடித்து சுவரில் மோத வைத்து இருக்கிறார். இதனால் நிலைகுலைந்த சிவகுமார் பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கொலையை செய்த பாபி தப்பி செல்லவே, இந்த விஷயம் தொடர்பாக நந்தகுடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நந்தகுடி காவல் துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாபிக்கு வலைவீசப்பட்டுள்ளது.