மாயமான 2 மாத கர்ப்பிணி பெண் எரித்து கொலை?.. சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!

மாயமான 2 மாத கர்ப்பிணி பெண் எரித்து கொலை?.. சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!



Karnataka state pregnant lady dead

கர்ப்பிணி பெண் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், அவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல், கபர் கிராமத்தில் வசித்து வருபவர் நேத்ராவதி (வயது 26). இவருக்கு திருமணம் முடிந்து தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 

இந்நிலையில், நேற்று நேத்ராவதி வீட்டில் இருந்து மாயமான நிலையில், அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இன்று அவர் வீட்டில் இருந்து 1 கி.மீ தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

India

அவரின் உடல் முழுவதும் எரிந்த நிலையில், இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.