#JustIN: மிலாடி நபி கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்: இருதரப்பு மோதல் அபாயத்தால் 144 தடை உத்தரவு.!

#JustIN: மிலாடி நபி கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்: இருதரப்பு மோதல் அபாயத்தால் 144 தடை உத்தரவு.!



Karnataka Shivamogga 144 Section implemented by District Administration 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம், ராகி குட்டா பகுதியில் மிலாடி நபி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மர்ம நபர்களால் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து, இருதரப்பு மோதல் ஏற்படவே, காவல் துறையினர் உடனடியாக களமிறங்கி அனைவரையும் விரட்டி அடித்தனர். 

பாதுகாப்பு கருதி உடனடியாக ராகி குட்டா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆங்காங்கே சில பகுதிகளில் பதற்றமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 

இதனையடுத்து, பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ராகி குட்டா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.