லாரி - மினி வேன் மோதி பயங்கர விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி., ஒருவரின் உயிர் ஊசல்.!

லாரி - மினி வேன் மோதி பயங்கர விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி., ஒருவரின் உயிர் ஊசல்.!



Karnataka Raichur Accident 4 Youths Died 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், பகடதின்னி பகுதியில், லாரியும் - இலகுரக சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில், 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் இன்று நடந்துள்ளது. 

நண்பர்களான இஸ்மாயில் (வயது 25), சன்னபசவா (வயது 26), அம்பரிஷ் (வயது 20), ரவி (வயது 21) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்களுடன் பயணித்த சமீர் என்ற இளைஞர், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையில், திருமண நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபடச்சென்ற நண்பர்கள் பலியானது தெரியவந்துள்ளது.