பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் - மனைவி; மர்ம மரணத்தால் சோகம்.!

பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் - மனைவி; மர்ம மரணத்தால் சோகம்.!



Karnataka Mysore Husband Wife Mystery Suicide 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம் கன்சூர் பகுதியைச் சார்ந்தவர் துரை (வயது 55). இவரின் மனைவி சாவித்திரி (வயது 47). தம்பதிகள் மூன்று மாதங்களுக்கு முன் கோவைக்கு சென்று இருந்த சமயத்தில், துரை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். 

அவரின் மருத்துவ செலவுக்கு வங்கி மற்றும் தனியாரிடம் அவரது மனைவி கடன் வாங்கி இருந்த நிலையில், கடந்த வாரம் கோவையில் இருந்து ஊர் திரும்பி இருக்கிறார். 

karnataka

நேற்று முன்தினம் காலையில் கணவர் துரைக்கு மருந்து கொடுத்து சாவித்திரி பணிக்கு சென்று வீடு திரும்பியிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படவில்லை என்ற நிலையில், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர்கள் வந்து பார்த்தபோது கணவன்-மனைவி இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.