பேராண்டி கண்ணுக்குள்ள அட்டை போயிருச்சு.. கண்களை பிடுங்கி முதியவர் பகீர் செயல்.!

பேராண்டி கண்ணுக்குள்ள அட்டை போயிருச்சு.. கண்களை பிடுங்கி முதியவர் பகீர் செயல்.!



Karnataka Bhadravathi Aged Old Man Loss Eye Self He Removed it

கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்ராவதி பகுதியை சேர்ந்த முதியவர், தனது கண்களில் அட்டை புகுந்துவிட்டது என நினைத்து இருக்கிறார். அட்டையை வெளியே எடுக்கிறேன் என்று கூறி, தனது கைகளால் கண்களை பிடுங்கி கீழே போட்டுள்ளார். 

இதன்பின்னர், பேரனை கூப்பிட்டு கண்களுக்குள் அட்டை புகுந்துவிட்டது, அதனை நசுக்கிவிடு என்று இரத்த கிளறியுடன் கூறியுள்ளார். ஒன்றும் புரியாத இளம் பேரனும், தாத்தாவின் கண்ணை தனது செருப்பு கால்களால் நசுக்கி இருக்கிறார். 

karnataka

சில நிமிடங்கள் கழித்து வலிதாங்க இயலாத பெரியவர் கதறியழவே, மகன் வந்து கேட்டபோது பேரன் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தந்தையை மீட்ட மகன் ஷிமோகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார்.