நல்லவள் போல பழகி, மதம்மாற்ற முயற்சி.. இந்து குடும்பமே கொலை, தற்கொலை..! பரபரப்பு தகவல்.!!

நல்லவள் போல பழகி, மதம்மாற்ற முயற்சி.. இந்து குடும்பமே கொலை, தற்கொலை..! பரபரப்பு தகவல்.!!



Karnataka Bagalkot Lady Try to Conversion Hindu Woman Vijayalatsumi Family Suicide Death

இந்து மதத்தை சார்ந்த பெண்மணியை மதமாற்றம் செய்ய முயற்சித்த நிலையில், இந்து குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம், பீலகி சுனகா கிராமத்தை சார்ந்தவர் நாகேஷ் (வயது 30). இவரின் மனைவி விஜயலட்சுமி (வயது 26). தம்பதிகள் இருவருக்கும் சப்னா (வயது 8), சமர்த் (வயது 4) என 2 பிள்ளைகள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தட்க்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூர் நகரம் பாண்டேஸ்வரர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். நாகேஷ் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், விஜயலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் விஜயலட்சுமி திடீரென காணாமல் போயுள்ளார். அவரை கண்டறிந்து தரக்கூறி நாகேஷ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள, விஜயலட்சுமி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கணவருடன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி உண்ணும் உணவில் விஷம் கலந்து மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்த நாகேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

karnataka

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டேஸ்வர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்க, நாகேஷ் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில், "தனது மனைவி விஜயலட்சுமியை நூர்ஜஹான் என்ற பெண்மணி முஸ்லீம் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தார். அதனால் மனைவி, குழந்தைகளை கொலை செய்து நானும் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, வழக்கில் முக்கிய குற்றவாளியான நூர்ஜஹானை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேரோண்டனர்.

விசாரணையில், பாகல்கோட்டையில் இருந்து பிழைப்புக்கு நாகேஷ் குடும்பம் மங்களூருக்கு வந்துள்ளது. இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில், 3 மாதத்திற்கு முன்பு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். வறுமையால் விஜயலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு, நூர்ஜஹான் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது வீட்டு வேலையை செய்ய விஜயலட்சுமியை அழைத்து சென்றுள்ளனர். இதனால் அவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

karnataka

இந்நிலையில், குடும்பத்தின் வறுமை குறித்தும், கணவன் - மனைவி தகராறு குறித்தும் விஜயலட்சுமி நூர்ஜஹானிடம் தெரிவித்துள்ளார். நூர்ஜஹான், "நீ நாகேஷை விவாகரத்து செய்து வந்தால், நல்ல முஸ்லீம் மதத்தை சார்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைக்கிறேன் என்றும், நீ திருமணத்திற்கு முன்பே முஸ்லீமாக மாற வேண்டும்" என்றும் ஆசையாக பேசி மனதை மாற்றி இருக்கிறார். நூர்ஜஹானின் பேச்சில் மயங்கிய விஜயலட்சுமியும் நாகேஷை விவாகரத்து செய்ய தயாராகியுள்ளார். தனது புகைப்படம் ஒன்றையும் நூர்ஜஹானிடம் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை வைத்து நூர்ஜஹான் விஜயலட்சுமிக்கு முஸ்லீம் மதத்தை சார்ந்த வரன் தேடி வந்த நிலையில், நாகேஷ் - விஜயலட்சுமி குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. தகவலை அறிந்த நாகேஷ் விஜயலட்சுமியிடம் கேட்டபோதும், அறிவுரை கூறியும் விஜயலட்சுமி அதனை கேட்டபாடில்லை. இதனால் நாகேஷ் தனது மனைவி, குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நூர்ஜஹானை கைது செய்த காவல் துறையினர், அவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.