டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்.! நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம்.!

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்.! நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம்.!



kangana-ranaut-talk-about-farmers-protest

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். 

அவர்களுடன் மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் அவரது டுவிட்டரில், “ டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல. இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள். துண்டாடப்பட்ட நாட்டை சீனா கைப்பற்றி, அமெரிக்காவைப் போல் சீன பகுதியாக மாற்ற முயற்சிக்கும். உங்களைப் போல் நாங்கள் நாட்டை விற்க மாட்டோம்'' என ரிஹானா என்ற அமெரிக்க பாடகிக்கு  கங்கனா பதில் அளித்துள்ளார்.