அக்னிபாத் போராட்டத்தால் பீகாரில் இணைய சேவை நிறுத்தம்...!

அக்னிபாத் போராட்டத்தால் பீகாரில் இணைய சேவை நிறுத்தம்...!


Internet service shut down in Bihar due to Agnipath protest

ராணுவ வீரர்கள் சேர்க்கைக்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் அக்னி வீரர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆறுமாதம் பயிற்சிக்காகவும், மீதமிருக்கும் மூன்றரை வருடம் வேலையும் உறுதி செய்யப்பட்டது. 

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகாரில் நேற்று முன்தினம் இரண்டு ரயில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மேலும் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. அப்போது ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் இருந்து போராட்டக்காரர்களால் 3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

மேலும் அக்னி வீரர்கள் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்வதால்  பீகார் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மாணவ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. மேலும் பீகாரில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால், மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 18 மாவட்டங்களுக்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகத் தளங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, என்று பீகாரின் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.