கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை நவம்பர் 5-ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு.!

கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை நவம்பர் 5-ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு.!



Interest rebate on interest to creditors

கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை 6 மாத தவணைக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பல்வேறு வகையிலான கடன் வாங்கியவர்களின் 6 மாத தவணைகளை, கொரோனா பரவலால் காரணமாக ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்தது. 

ஆனால் அந்த 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கூறியதால் பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்தனர். இந்தநிலையில் அனைத்து தேசிய வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.2 கோடிக்கும் குறைவாக கடன் பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இந்த வெட்டிச்சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rbiஇதனை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்பேரில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 23-ந் தேதி வெளியிட்டது. இதனையடுத்து கடன்தாரர்கள் செலுத்திய கூடுதல் வட்டித்தொகையை அவர்களுக்கு நவம்பர் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் வட்டி சலுகை தொகை, கடன்தாரர்களின் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.