கொரோனா ஆராய்ச்சியில் உலகத்திற்கு வழிகாட்டியாக திகழும் இந்திய விஞ்ஞானிகள்!

கொரோனா ஆராய்ச்சியில் உலகத்திற்கு வழிகாட்டியாக திகழும் இந்திய விஞ்ஞானிகள்!



Indian doctors research for corona

காமன்வெல்த் அறிவியல், தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியாக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த டாக்டர் எஸ்.எஸ்.வாசன். இவர் ஆஸ்திரேலியாவில் விலங்கு சுகாதார ஆய்வகத்தில் ஆபத்தான நோய்க்கிருமி குழுவை வழிநடத்தி வருகிறார். 

இந்த குழு, இதற்கு முன்னர் பல ஆபத்தான நோய்க்கிருமிகள் தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முன்னேற்றங்களை கண்டுள்ளது. காமன்வெல்த் அறிவியல், தொழில் ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி, இப்போது செயல்திறனுக்காக சோதனைகளை நடத்தி வருகிறது. பாதுகாப்பான முறையில் தடுப்பூசியை செலுத்துவதற்கான வழிமுறைகளையும் மதிப்பீடு செய்து வருகிறது.

corona

இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கொரோனாவை தடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விஞ்ஞானிகள் குழு கொரோனா வைரசை இந்த உலகில் இருந்து விரட்டியடித்துவிட்டால், இவர்களை உலகமே கொண்டாடும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.