தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ; உடல் துண்டுதுண்டாகி உயிரிழந்த 20 வயது இளம்பெண்.. பீஸ் பீஸான உடலை கட்டி கதறிய பெற்றோர்.!



in Uttarakhand Roorkee 20 Aged Girl Died While Making reels 

ரீல்ஸ் மோகத்திற்கு தனது உயிரை பணயமாக வைப்பது உயிர்பலியை கட்டாயம் ஏற்படுத்தும்.

உத்திரகன்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரூர்கி, சிவபுரம் பகுதியில் வசித்துவரும் 20 வயது இளம்பெண் வைஷாலி. 

இவர் இன்று தனது நண்பர்களுடன் ரஹிம்பூர் பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார். 

அச்சமயம் தண்டவாளத்தில் ஹரித்துவாரில் இருந்து சஹாரன்பூர் நோக்கி பயணிக்கும் அதிவிரைவு இரயில் வந்துள்ளது. 

இதனால் இரயில் மோதியதில் படுகாயமடைந்து உடல் துண்டுதுண்டாக சிதறி வைஷாலி பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த இரயில்வே காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், துண்டு துண்டாக சிதறிய உடல் பாகங்களை பார்த்து பெற்றோர் கதறியது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.