17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்; நட்பாக பழகி மலர்ந்த காதலால் விபரீதம்.!



in Nagpur 11th Class Student Elopes With Woman 

 

11 ம் வகுப்பு மாணவருடன், இளம்பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் வசித்து வரும் 3 குழந்தைகளின் தாயான 36 வயது இளம்பெண், 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவர் கண்டறியப்பட்ட நிலையில், பெண் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ஒரு நொடி நின்று வந்திருக்கலாமே.. 5 வயது சிறுவனுக்கு இப்படியா மரணம் வரணும்? பதறவைக்கும் வீடியோ.!

இருவரும் ஓட்டம்

சம்பந்தப்பட்ட அப்பெண்ணுக்கு திருமணம் முடிந்து கணவர், 3 குழந்தைகள் இருக்கின்றனர். அப்போது சிறுவன் - இளம்பெண் நேரில் சந்தித்தும், தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்ததாக கூறப்படும் நிலையில், நட்பில் தொடங்கிய பழக்கம் இருவரையும் விபரீதத்தில் தள்ளி இருக்கிறது.

 Nagpur

சிறுவன் மீட்பு

சிறுவன் இளம்பெண்ணுடன் மாயமானதை உறுதி செய்த பெற்றோர், அங்குள்ள லடகன்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவனுக்கு 17 வயது ஆவதால், அதிரடியாக அவரை தேடிய காவல்துறையினர் மீட்டனர். மேலும், பெண்ணும் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: சிறுமியை சுற்றிவளைத்து கடித்துக்குதறிய தெருநாய்கள்; நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சிகள்.!