கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை கிடுகிடு உயர்வு; தலைநகரில் தட்டுப்பாடு.! 



Hyderabad No Beer due to Heatwave 


கடுமையான வெயிலை எதிர்கொள்ளும் மக்கள்:

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில், கடந்த சில மாதமாகவே கடுமையான வெயில் வாட்டி வதைக்கியது. கோடைகாலத்தில் அங்குள்ள மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க இயலாமல் பரிதவிக்கின்றனர்.

பீர் விற்பனை அதிகரிப்பு:

இதனால் அங்குள்ள பல மதுபானக்கடைகளில் பீர் ரக விற்பனை என்பது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது. ஹைதராபாத் நகரில் உள்ள பல கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவை பலரும் வாங்கி ஸ்டாக் வைத்து குடிக்கின்றனர்.

பீர் ஸ்டாக் இல்லை:

அதிகளவு பீர் பானங்கள் அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டு, தற்போது அங்கு பேருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பீரை விரும்பும் பிரியர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.