கள்ளக்காதலை கண்டித்த மனைவியின் மர்ம உறுப்பில் கணவன் செய்த கொடூரம்!

கள்ளக்காதலை கண்டித்த மனைவியின் மர்ம உறுப்பில் கணவன் செய்த கொடூரம்!


 Husband inserted bike grip in private part

மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலை கண்டித்த மனைவியின் மர்ம உறுப்பில் பைக் ஹாண்டில் கிரிப்பை உள்ளே சொருகிய கணவன் மீது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தின் இந்தோர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தீராத வலிக் காரணமாக மஹாராஜா யஸ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

illegal affairs

காரணம் அவரது அந்தரங்க உறுப்பில் பைக் ஹாண்டிலில் பயன்படுத்தப்படும் கிரிப் ஒன்று உள்ளே செலுத்தப்பட்டு இருந்தது. பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த கிரிப்பை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து அந்த கிரிப் எப்படி உள்ளே சென்றது என விசாரித்தனர். அப்போது தான் தெரிய வந்தது, இதற்கு காரணம் அந்த பெண்ணின் கணவர் பிரகாஷ் பில் என்பவர் என்று. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷிற்கு வேறே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.

இதனைக் கண்டுக்கொண்ட மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த கணவர் பிரகாஷ் வீட்டில் இருந்த பைக் ஹாண்டில் கிரிப்பை எடுத்து மனைவியின் அந்தரங்க உறுப்பில் சொருகியுள்ளார். வலியால் துட்டித்த மனைவியால் அதனை வெளியில் எடுக்க முடியவில்லை. 

illegal affairs

இந்த சம்பவத்தை பற்றி பிறரிடம் வெளியில் சொல்லவும் மிகவும் கூச்சப்பட்டுள்ளார் அந்த பெண். இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்த கிரிப் உள்ளேயே இருந்துள்ளது. தற்போது திடீரென வலி அதிகமாகவே வேறு வழியின்றி அந்த பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் கணவனின் இந்த கொடூர செயல் குறித்து வழக்குப்பதிவு செய்த இந்தோர் போலீசார் பிரகாஷௌ கைதீ செய்து சிறையில் அடைத்துள்ளனர்.