மனைவிக்கு ரூ.55ஆயிரம் ஜீவனாம்சம்! 7 பெட்டிகளில் வெறும் சில்லறையாக கொடுத்து அதிரவைத்த கணவர்!!

மனைவிக்கு ரூ.55ஆயிரம் ஜீவனாம்சம்! 7 பெட்டிகளில் வெறும் சில்லறையாக கொடுத்து அதிரவைத்த கணவர்!!



Husband gave 55thousand rupees alimony to his wife as coin

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் தஸ்ரத் குமாவத். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 
சீமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே தஸ்ரத் வரதட்சணை கேட்பதாக அவரது மனைவி புகார் அளித்தார். மேலும் இருவரும் விவாகரத்து கோரி வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மனைவிக்கு இடைக்கால நிவாரணமாக  2.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் தஸ்ரத் அந்த பணத்தை வழங்கவில்லை. அதனால் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை நாடிய நிலையில் தஸ்ரத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வெளியே கொண்டு வர எண்ணிய அவரது உறவினர்கள் முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை கொடுக்க முன் வந்தனர்.

55 thousand

அவர்கள் 55 ஆயிரம் ரூபாயை சில்லறையாக ஏழு பெட்டிகளில் கொண்டு வந்துள்ளனர். இதனைக் கண்ட நீதிமன்றம் மற்றும் தஸ்ரத் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த நாணயங்கள் நாட்டில் செல்லத்தக்கவை. அதனால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் சீமா தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அந்த நாணயங்களை 1000 ரூபாய்களாக பிரித்து 55 பொட்டலங்களாக கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.