"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
மனைவி கேட்ட அந்த கேள்வி.! மூக்கை கடித்து குதறிய கணவன்!! வெளியான பகீர் சம்பவம்!!
மனைவி கேட்ட அந்த கேள்வி.! மூக்கை கடித்து குதறிய கணவன்!! வெளியான பகீர் சம்பவம்!!
குஜராத் மாநிலம் கோடாசர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா குல்வானி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கைலாஷ் குமார். இவர் சிலகாலமாக வேலை இல்லாமல்இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
மேலும் வேலை இல்லாததால் கைலாஷ்குமார் பெரும் மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குல்வானியின் பர்சில் வைத்த ரூ.3000 பணம் காணாமல் போயுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து குல்வானி தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபம் முற்றவே கைலாஷ்,தன் மனைவியை கீழே தள்ளி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அவரது மூக்கையும் கடித்துள்ளார்.
இதில் வலிதாங்க முடியாமல் குல்வானி அலறிய நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குல்வாவிக்கு மூக்கில் 25 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து குல்வானி அளித்த புகாரின் அடிப்படையில் கைலாஷை போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.